வெடிகுண்டு என நினைத்து வெளியிட்ட வெள்ளை அறிக்கை புஸ்வானமாகிவிட்டது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ !

மதுரையில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் தங்களுடைய திமுக கரை வேட்டியை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள். அதிமுகவை கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.

Update: 2021-08-10 10:48 GMT

வெடிகுண்டு என நினைத்து வெளியிட்ட வெள்ளை அறிக்கை இப்படி புஸ்வானமாகிவிட்டதே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் தங்களுடைய திமுக கரை வேட்டியை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள். அதிமுகவை கருணாநிதியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.

மேலும், நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை வெத்து விளம்பரத்துக்காக வெளியிட்டு இருக்கிறார். வெடிகுண்டு என நினைத்து வெளியிட்ட வெள்ளை அறிக்கை புஸ்வானமாகிவிட்டதுதான் மிச்சம். மேலும், 2026ம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம். அப்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:BBC

https://www.puthiyathalaimurai.com/newsview/112518/White-Paper-Finance-Minister-publishes-for-publicity-Sellur-Raju

Tags:    

Similar News