பிரிவினைவாத சக்திகளுக்கு யாரெல்லாம் துணை! முழு விவரத்துடன் அமித்ஷா'விற்கு கடிதம் எழுதிய அண்ணாமலை - அடுத்த ஆட்டம் ஆரம்பமா?

பா.ஜ.க'வினரை குறி வைத்து இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-09-25 11:36 GMT

பா.ஜ.க'வினரை குறி வைத்து இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை தாக்குதல் தொடர்பாக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா'விற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில். வகுப்புவாத சக்திகளுக்கு துணை போகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை எல்லாம் ஆதாரங்களுடன் ஆவண விளக்கங்களுடன் சுட்டிக்காட்டி அமித்ஷாவுக்கு அனுப்பி உள்ளதாக அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகம் வந்த ஜே.பி.நட்டா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை கவனித்து சென்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அனைவரின் பாதுகாப்புக்காகவும் பா.ஜ.க தொடர்ந்து குரல் கொடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அடுத்து என்ன முடிவு எடுக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



Source - Maalai malar

Similar News