பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான்.. ராகுல்போன இடமெல்லாம் தோல்விதான்.. எல்.முருகன்.!

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றிதான்.. ராகுல்போன இடமெல்லாம் தோல்விதான்.. எல்.முருகன்.!

Update: 2021-02-16 18:59 GMT

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம் தோல்வி என்ற நிலைதான் உள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடிக்கு அதிமுக, பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போன்று வருகின்ற 25ம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகை தருகிறார். 21ம் தேதி சேலத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தருகிறார்.

நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். இந்த தேர்தல் பாஜகவிற்கு முக்கியத் தேர்தல் என்று நினைத்து பணியாற்றி வருகிறோம். மேலும், இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் பாஜகவினர் செல்வார்கள். திமுக தலைவர் ஸ்டாலினால் எப்போதுமே ஆட்சி அமைக்க முடியாது.

தேசிய வளர்ச்சிக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது. எனவே பொதுமக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஸ்டாலின் கனவு கனவாகவே மாறப்போகிறது. அதே போன்று தமிழகம் வந்திருந்த ராகுல்காந்தி ஸ்டாலின் பற்றி எங்கும் பேசவில்லை. ராகுல்காந்தி செல்கின்ற இடமெல்லாம் தோல்விதான் ஏற்படுகிறது. மிகச்சிறந்த ஆட்சியை தந்த அம்மாவிற்கு புகழஞ்சலி செலுத்துவதில் தவறு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News