கர்நாடகாவில் மறைமுகமாக கலவரத்தை தூண்டிவிடும் காங்கிரஸ்: எடியூரப்பா பரபரப்பு தகவல்!

Update: 2022-04-20 14:53 GMT

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உப்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: உப்பள்ளியில் கலவரம் நடைபெற்றுள்ளது. இதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் இருக்கின்றார் என்று அனைவருக்கும் தெரியும்.

காவல் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களை தேசப்படுத்தியது மட்டுமின்றி போலீசாரையும் தாக்கியுள்ளனர். இதில் 12 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். இது போன்றவர்களை அப்பாவிகளா என்று யாராவது சொல்ல முடியுமா?

இதனிடையே தவறு செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பாவிகளை கைது செய்யக்கூடாது என்று சொல்லி வருகின்றனர். இதன் மூலம் மாநிலத்தில் கலவரத்தை மறைமுகமாக காங்கிரஸ் தலைவர்கள் ஊக்குவிக்கின்றனர். பெங்களூருவில் இருந்து கொண்டு இப்படி பேசுவது சரியில்லை. நேரடியாக உப்பள்ளிக்கு சென்று சம்பவம் நடைபெற்ற இடங்களை பார்வையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy:NDTV

Tags:    

Similar News