நீங்க சமூக பேச வெட்கப்படணும் சென்ட்ராயன் - சமூகநீதி நாடக கும்பலை வெளுத்த ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டில் சமூகநீதி, தீண்டாமை கூடாது என பேசி போலி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமூகநீதி, தீண்டாமை கூடாது என பேசி போலி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அடிக்கடி கூறும் வார்த்தை சமூகநீதி, இந்த சமூக நீதி என்கிற வார்த்தையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு உபயோகிக்க கூடாது என்ற நிபந்தனையை விதித்தால் அனைத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விதித்தால் கண்டிப்பாக பலருக்கு வேறு எதுவும் பேசவே தோணாது. ஆனால் தமிழகத்தில் சமூக நீதியே இல்லாமல் நடைபெறும் சாதிய ரீதியான கொடுமைகள் அதிகம்.
கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் நடந்த சம்பவம் இதற்க்கு மிகப்பெரிய உதாரணம், கடந்த டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில், இறையூர் கிராமத்தில் உள்ள பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலினத்து குடும்ப மக்கள் வசித்து வரும் பகுதியில் அவர்கேளுக்கென இருந்த நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்து அவர்களை குடிக்க வைத்த கொடூரம் நடந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளலூர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது, ஆனால் சம்பவம் நடந்து இதுவரை 3 மாதங்கள் ஆகியும் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்களுக்கு இதுவரை விளக்கவில்லை, முதல்வர் ஸ்டாலின் இதுவரை 3 மாதங்கள் ஆகியும் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று மக்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவ்வளவு ஏன் பட்டியலின பாதுகாவலர் என கூறி அரசியல் செய்யும் விசிக கட்சியின் திருமாவளவன் கூட அங்கு சென்று எட்டி பார்க்கவில்லை..
அந்த நிலையில் உள்ளது தமிழகத்தில் சமூக நீதி, இதைத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பிரதமர் மோடியும் அம்பேத்கரும்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: "அம்பேத்கர் ஒரு தேசியவாதி. ஆங்கிலேயர்கள் பட்டியலின மற்றும் பழங்குடியினர் அரசியல் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவந்து நாட்டை பிரித்தாள முயன்றபோது அதனை மலைபோல் இருந்து தடுத்தவர் அம்பேத்கர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தை செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை.