அரபி வகுப்பு என்ற பெயரில் தீவிரவாத செயல்...! சிக்கிய கோவை நெட்ஒர்க்...! NIA ஆடிய வேட்டை...!

Update: 2023-09-17 14:08 GMT

அரபி வகுப்பு என்ற பெயரில் ஐ எஸ் ஐ எஸ் க்கு ஆள் சேர்க்கை…! சிக்கிய கோவை கும்பல்...!

இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்ய இறங்கியதும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன

கோவை மாவட்டம் உக்கடத்தின் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. விசாரணையில் வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரை சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோரை கைது செய்தனர். இதன் மூலம் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை துவங்கியது.

சென்னையில் திருவிக நகர் முஜ்பீர் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை, கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ் என்பவரின் வீடு உள்பட தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 11 மாதங்களாகியும் இந்த வழக்கை NIA அதிகாரிகள் இந்த வழக்கில் உள்ள தீவிரவாத தொடர்பை கண்டறிய கடந்த 11 மாதத்தில் பலமுறை தமிழகத்தில் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, முத்துப்பேட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இந்த வழக்கின் தொடர்புடைய நெட்ஒர்க்கை கண்டறிய NIA அதிகாரிகள் பல சோதனை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு தேசிய அளவில் முக்கியமான வழக்காக மாறியுள்ளது.

கோவையில் உள்ள அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாலை முடிந்த சோதனையில் NIA அதிகாரிகள் ரூ.60 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்துள்ளனர். ரூ.60 லட்சம் இந்திய பணம் இல்லாது 18,200 அமெரிக்க டாலர்கள், தீவிரவாதம் தொடர்பான புத்தகம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

அரபு மொழி வகுப்பு எடுப்பதாக கூறி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைக்க பிரச்சாரம் செய்தது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்க ஒரு கல்லூரியே இயங்கி வந்தது மற்றும் அதனை தொடந்து NIA அதிகாரிகள் சோதனையில் இறங்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Similar News