ஜெபம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் - சிறையில் கம்பி எண்ணி பாவமன்னிப்பு!

Update: 2021-04-19 12:36 GMT

குடும்ப கஷ்டங்களை கூறிய பெண்ணுக்கு ஜெபம் செய்வதாகக் கூறி பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை ஆவடி அருகே திருமலை நகரில் சர்ச் ஒன்றை நிர்வகித்து வருபவர் ஸ்காட் டேவிட் என்ற கிறிஸ்தவ மத போதகர். இவரிடம் தனது குடும்ப கஷ்டங்களை தெரிவிக்க 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றுள்ளார். இதனால் மதபோதகர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஜெபம் செய்வதாக கூறிக்கொண்டு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும் குடும்ப கஷ்டங்கள் தீருவதற்கு சர்ச்சுக்கு வந்து ஜெபம் செய்யுங்கள் என்றும் மத போதகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜெபம் செய்வதற்காக திருமலையில் உள்ள சர்ச்சுக்கு அந்தப்பெண் சென்று ஜெபம் செய்துள்ளார். அப்பொழுது பின்பக்கமாக வந்த ஸ்காட் டேவிட் அந்தப் பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மதபோதகரிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சத்தமாக கூச்சலிட்டுக் கொண்டு சர்ச்சில் இருந்து வெளியே ஓடியுள்ளார். பிறகு ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பிறகு மதபோதகர் ஸ்காட் டேவிட்டை கைது செய்த காவல் துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு நீதிபதியின் உத்தரவின் பேரில் மதபோதகரை திருவள்ளூரில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர். குடும்ப கஷ்டங்களை தெரிவிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமான முறையில் நடந்து கொண்ட மதபோதகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News