விண்ணபிக்க செல்வோருக்கு எச்சரிக்கை! மத்திய உளவுத்துறையில் 2,000 பணி இடங்கள் காலியாக இருப்பதாக பரவி வரும் தகவல்!
விண்ணபிக்க செல்வோருக்கு எச்சரிக்கை! மத்திய உளவுத்துறையில் 2,000 பணி இடங்கள் காலியாக இருப்பதாக பரவி வரும் தகவல்!
I.B என அழைக்கப்படும் மத்திய உளவுத்துறையில் 2 ஆயிரம் பணி இடங்கள் காலியாக இருப்பதாக பரவி வரும் தகவல் உண்மை அல்ல என அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் கழித்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு செய்தித்தாள் அது ஒரு உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இப்போதைக்கு, நோட்டீஸ் போலியானது என்று கூறிய பத்திரிகை தகவல் அலுவலக (பிஐபி) ட்வீட் அகற்றப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்களில் சுமார் 2 ஆயிரம் கிரேட் - டூ மத்திய உளவுத்துறை அதிகாரி பணி இடங்கள் காலியாக இருப்பதாக கூறி, செய்தித்தாள் விளம்பரம் ஒன்று, சமூக வலைதளங்களிலும், ஆன் லைன் வேலை வாய்ப்பு இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.
புலனாய்வுப் பணியகத்தில் ஆட்சேர்ப்பு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், பணியாளர்கள் தேர்வு ஆணையம் மற்றும் அகில இந்திய ஆட்சேர்ப்பு தேர்வுகள் மூலம் சில பதவிகளுக்கு செய்யப்படுகிறது. ஐபி ஆட்சேர்ப்பு தேர்வுகள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படுகின்றன.
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு போலியானது என்று டிசம்பர் 16 அன்று பிஐபி உண்மை சோதனை ட்வீட் செய்திருந்தது.