மாணவி இறப்பிற்கு நீதி கேட்ட ABVP அமைப்பினர் கைது: தி.மு.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் வெடித்த போராட்டம்!

Update: 2022-02-16 04:15 GMT

தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றத்தால் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு முன்பு ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

Full View

இந்த செய்தியை அறிந்த (ஏபிவிபி) எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் திமுக அரசை கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்பொம்மையை எரித்து கண்டனங்களை பதிவு செய்தனர். அதே போன்று டெல்லி உட்பட பல மாநிலங்களில் போராட்டம் வலுத்து வருவதால் திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பழைய தமிழ்நாடு இல்லம் முன்பாக திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். மதமாற்றத்தால் உயிரிழந்த மாணவிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மதமாற்ற தடை சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு இல்லம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. அதே போன்று சிம்லா, ஜம்மு காஷ்மீர், கோரக்பூர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News