தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியின் ரூ. 22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.!
தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியின் ரூ. 22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.!
பணமதிப்பிழப்பு தடுப்பு சட்டம் 2002 (PMLA) இன் பிரிவு 5 ன் கீழ் தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 22.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஏழு வங்கிக் கணக்குகள் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்க (ED) துறையால் தற்காலிகமாக அனைத்துச் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. ED உடன் இணைக்கப்பட்ட சொத்துக்களில், மும்பையில் ஒரு ஹோட்டல், இரண்டு பங்களாக்கள் மற்றும் பஞ்சகனியில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் ஆகியவை மறைந்த தீவிரவாதியான இக்பால் மிர்ச்சியின் உறவினருக்கு சொந்தமானவை.
தீவிரவாதியான இக்பால் மிர்ச்சி தனது குற்றங்களின் மூலம் ஈட்டிய வருமானத்தை மும்பையில் உள்ள ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாகவும், இதற்காக அவர் பல ஷெல் நிறுவனங்களை அமைத்ததாகவும் ஒரு வழக்கை ED- 2019 இல் எடுத்துக் கொண்டது. இதில் மேலும் DHFL விளம்பரதாரர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாகவும் டைம்ஸ் நவ் நிறுவனத்தின் உரிமையாளர் பவடோஷ் சிங் தெரிவித்துள்ளது.
மேலும் டைம்ஸ் நவ் நிறுவனம் கூறுகையில், "ஒரு வருட காலத்திற்குள் ரூ 800 கோடிக்கு மேல் சொத்துக்களை ED துறையால் இணைக்க முடிந்தது. இதில் 14 வணிக சொத்துக்கள் மற்றும் துபாயில் ஒரு ஹோட்டல் 237.04 கோடி ரூபாய். இந்த சொத்துக்கள் அனைத்தும் உண்மையில் இக்பால் மிர்ச்சியின் குடும்பத்தினரால் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் பல்வேறு ஷெல் நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டவை" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.