மீண்டும் ஊரடங்கு ? - நிபுணர் குழு கூறியது என்ன ?
மீண்டும் ஊரடங்கு ? - நிபுணர் குழு கூறியது என்ன ?
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன.
மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர்ந்து பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தது. கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி 10 உறுப்பினர்களை கொண்ட குழு புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும் கொண்ட நிபுணர்கள் கூறியதாவது முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடித்தால் அறிகுறி தொற்றுடன் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்தி விடலாம் அதுவே ஊரடங்கு காலகட்டத்தை முடுவுக்கு கொண்டு வரும் செயலக அமையும் என தெரிவித்துள்ளனர்.