டெல்லி: மைனர் சிறுமியை இந்து என்று ஏமாற்றிய இளைஞன் - தொடரும் லவ் ஜிகாத்.!

டெல்லி: மைனர் சிறுமியை இந்து என்று ஏமாற்றிய இளைஞன் - தொடரும் லவ் ஜிகாத்.!

Update: 2020-10-24 15:01 GMT

சமீப காலமாக நாட்டில் 'லவ் ஜிகாத்' வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனைப் பலரும் மறுத்து வந்தாலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் லவ் ஜிகாத் வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது இது இந்த லவ் ஜிகாத் நாடுமுழுவதும் தீவிரமாகப் பரவி வருகின்றது. சமீபத்தில் டெல்லியில் அது போன்று ஒரு வழக்கு எழுந்துள்ளது.

இந்த வழக்கில் இ-ரிக்க்ஷா ஓட்டுநர் தில்பார் குரேஷி இந்து என்று அறிமுகம் செய்து 13 வயது இந்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இருவரும் அக்டோபர் 18 இல் ஓடிச்சென்றுள்ளனர். முஸ்லீம் இளைஞனுக்கு எதிராகப் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்ததை அடுத்து டெல்லி காவல்துறை அவனைத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் டெல்லி சதர்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர், சிறுமி 8ஆம் வகுப்பு படித்துவருகின்றாள் என்று அறிக்கை தெரிவிக்கின்றது. தில்பார் அதே காலனியில் வசித்து அனைவரிடமும் ராகுல் என்று அறிமுகம் செய்துகொண்டதாகப் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மேலும் தில்பார் பல பெயர்களில் பேஸ்புக்கில் கணக்குகள் வைத்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இவர் உத்தரப் பிரதேசத்தில் ஷெகுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அக்டோபர் 18 இல் தங்கள் மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்து தேடியாக குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் அருகிலிருந்த CCTV கேமராவில் குதுப் மெட்ரோ நிலையத்தை நோக்கி மைனர் சிறுமி தில்பாருடன் செல்வது பதிவாகியிருந்தது. CCTV காட்சிகள் வைத்தும் சிறுமியின் பெற்றோர்கள் புகாரை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மேலும் தில்பார் உடன் வசித்து வந்த இரண்டாவது ஊனமுற்ற மனைவி சோனியைத் தங்கை என்று அறிமுகம் செய்துள்ளான். 18 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்தாக சோனி தங்கை கூறியுள்ளார். தில்பார் முதல் மனைவி குறித்து சோனிக்கு தெரியவந்த பிறகு தில்பார் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், சோனி கர்ப்பம் உற்றபோதிலும் அவளை அவன் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவாகச் சோனி அவளது கருவிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டதாகவும், அவர்களது இறுதிச் சடங்கு கூட தில்பார் பங்குபெற வில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தில்பார் குரேஷியின் முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதையும் அவன் விட்டுச் சென்ற பிறகு தற்போது அவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் வசித்து வருவதை தில்பார் சகோதரர் உறுதிசெய்துள்ளார்.

Similar News