சீனர்களை விரட்டியடித்து சிவனின் கயிலாய மலையை வசப்படுத்திய நம் இராணுவத்தினர்.!
சீனர்களை விரட்டியடித்து சிவனின் கயிலாய மலையை வசப்படுத்திய நம் இராணுவத்தினர்.!
நம் நாட்டின் இமய மலைத்தொடர்களில் இருக்கும் கயிலாய மலையை அதிசயங்கள் நிறைந்த மலை எனக் கூறுவர். கிட்டத்தட்ட 22 ஆயிரம் அடிவரை உள்ள உலகின் மிக உயர்ந்த சிகரங்கள் இங்குள்ளதாகக் கூறப்படுகிறது. உலகைக் காக்கும் கடவுளான "சிவபெருமான்" மற்றும் எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழும் இடமாக இந்துக்கள் இந்த கயிலாய மலையை கருதுகிறார்கள். சிவன் ஆலயம் அமைந்துள்ள இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது.
இந்த கயிலை மலை எனப்படும் கயிலாய மலைக்கு சென்று சிவனை வழிபட இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும். சென்ற 1959 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் நேபாளம், திபெத் வழியாக தங்கு தடை இன்றி இந்த மலைக்கு சுதந்திரமாக சென்றனர். ஆனால் சீனா 1959 ஆம் ஆண்டு திபெத்தை ஆக்கிரமித்தது. அதன் பிறகு இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. அப்போது ஹிந்துக்கள் திபெத் வழியாக மானசரோவர் செல்வதற்கு சீனா தடை விதித்தது. மேலும் மானசரோவர் செல்லும் இந்தியர்கள் விசா வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனால் இந்தியாவில் இருந்து செல்லும் யாத்ரீகர்களுக்கு அங்கு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. சீனாவிடம் விசா வாங்கி சென்றாலும், கைலாஷ்-மானசரோவருக்கு பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் சிக்கிம், நேபாளம் வழித்தடங்களில் 2 முதல் 3 வாரங்கள் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும். லிபுலேக் வழித்தடமானது 90 கி.மீ அதிக உயரம் கொண்ட மலை ஏறும் பயணம் என்பதால் வயதான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந் நிலையில் 2014 ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றுக் கொண்ட பின் அவரது அரசு சீனாவின் தலையீடு இல்லாமல் அதாவது திபெத் வழியாக செல்லாமல் கயிலாய மலைக்கு சுலபமாக செல்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்தது. இந்நிலையில் 2020 மே மாதத்தில், கைலாஷ்-மானசரோவர் யாத்திரை நேரத்தைக் குறைக்கும் 80 கி.மீ நீளம் கொண்ட சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார்.