காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்களிடமிருந்து கட்டு காட்டாக பணம் பறிமுதல் - எங்கே தெரியுமா?
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்களிடமிருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்களிடமிருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்களிடமிருந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டு கட்டுகளை போலீசார் கட்டு கட்டாக பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின். ஹவுரா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் வாகனத்தை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர்.
அந்த காரில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் இப்ரான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நாமந்த் பிக்ஸல் ஆகிய மூவரிடம் ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச் சென்ற பணம் சிக்கியது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.