புடவையில் சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுப்பு! மாடர்ன் டிரஸ் போட்டிருந்தால் மட்டுமே அனுமதி! பெண் ஊழியரின் அராஜகம்!

டெல்லியில் புடவை அணிந்து சென்ற பெண்ளை ஓட்டலுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-23 10:02 GMT

டெல்லியில் புடவை அணிந்து சென்ற பெண்ளை ஓட்டலுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரை உள்ளே செல்வதற்கு அனுமதிக்காமல் மாடர்ன் டிரஸ் போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இது பற்றி பெண் ஊழியர் புடவை அணிந்திருந்த பெண்ணிடம் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் பெண், புடவை அணிந்திருந்தால் ஓட்டல் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு பதில் அளித்த பெண் ஊழியர், மேடம் மேற்கத்திய ஆடையில் வருபவர்களுக்கு மட்டுமே நாங்கள் அனுமதி வழங்குவோம், புடவையில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யூடியூப்பில் இதுவரை 2.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பார்த்துள்ளனர். இதற்கு பலர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News