பாதுகாப்பு படையினர் மீது குண்டு வீசி தாக்கிய பயங்கரவாதிகள்.! #NewsUpdate
பாதுகாப்பு படையினர் மீது குண்டு வீசி தாக்கிய பயங்கரவாதிகள்.! #NewsUpdate
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் டவுன் பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது, பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டு விழுந்து வெடித்ததில் ஒரு வீரரின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சி.ஆர்.பி.எப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.