ஆசிரியர் வார விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி !

Breaking News.

Update: 2021-09-07 18:00 GMT

ஆசிரியர் வார விழாவை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் கல்விதுறையின் முக்கிய அம்சங்களை வெளியிட்டார்.

செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஷிக் ஷாக் பார்வ்என்னும் ஆசிரியர் வார மாநாட்டை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான சிறப்பு புத்தகங்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த புதிய முயற்சிகள் நல்ல வருங்கால சந்ததியை வடிவமைக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியவர்கள் மாணவர்களிடம் சென்று விளையாட்டு குறித்த ஆர்வத்தை அளிக்கவேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

மேலும்,கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Source: Polimer

Tags:    

Similar News