ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கண் புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது !

President Undergone an Eye Operation.

Update: 2021-08-20 01:04 GMT

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று கண் புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இது குறித்து, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 75, டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த அடுத்த சில மணி நேரங்களில், அவர் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News