நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா - மன்னிப்பு கேட்ட பின்னணி என்ன தெரியுமா?

'நிபந்தனிடம் மன்னிப்பு கோருகிறோம்' என சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Update: 2022-09-23 12:24 GMT

'நிபந்தனிடம் மன்னிப்பு கோருகிறோம்' என சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கப் பிரிவு பண மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது அதன் காரணமாக தற்போது ஜாமினில் இருக்கிறார். ராபர்ட் வதேரா கடந்த மாதம் 12ஆம் தேதியிலிருந்து நான்கு வாரங்களுக்கு இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றுவர நீதிமன்றம் திறப்பு அனுமதி கொடுத்திருந்தது.

இந்த நிலையில் இந்த பயணத் திட்டத்தில் இங்கிலாந்துக்கு துபாய் வழியாக செல்வதாக ராபர்ட் வதேரா குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பயணத்தின் போது ராபர்ட் துபாயில் துபாயில் 25ஆம் தேதியிலிருந்து 23ம் தேதி தங்கி இருந்து பின் பிரிட்டனுக்கு சென்றுள்ளார்.

வெளிநாடு சென்றுவர கோர்ட் விதித்திருந்த நிபந்தனையை மீறி ராபர்ட் வதேரா மீது துபாயில் நான்கு நாட்கள் தங்கி இருந்தார். இதை குறித்து நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா. 'மருத்துவ காரணங்களுக்காக துபாயில் துபாயில் தங்கினேன்' என அவர் தெரிவித்தார், இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதி ராபர்ட் வதேரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்க முடியாது என குறிப்பிட்டார்.


Source - Junior Vikatan

Similar News