பாகிஸ்தான்: கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எட்டு வயது இந்து சிறுமி!

பாகிஸ்தானில் எட்டு வயது இந்து சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-31 12:32 GMT

பாகிஸ்தானில் பெரும்பாலான முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். சிறுபான்மையை சேர்ந்த இந்துக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு நடக்கும் இந்துக்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது 8 வயதான இந்து சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்த மற்றொரு பெண் வெளியிட்ட twitter பதிவின் மூலமாகத்தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இந்து மதத்தைச் சேர்ந்த எட்டு வயதான இந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடத்தப்பட்டுள்ளார். மேலும் அன்று இரவு அவர் கொடூரமான கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை இந்து உரிமை ஆர்வலர் ஒருவர்தான் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் சிறுமியின் முகத்தில் பலமான காயம் ஏற்பட்டு இருந்தது.


இது பற்றி தன்னுடைய பதிவில் அந்த பெண்மணி கூறுகையில்,  "சிறுமியின் பிறப்புறுப்புகளில் இருந்து தொடங்க ரத்தப்போக்கு ஏற்பட்டு வருகிறது. சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் முதல் சிறுமியின் முகத்தை முழுவதுமாக சிதைக்கும் முயற்சித்து உள்ளார்கள். பாகிஸ்தானில் ஏழைகளுக்கு இடமில்லை. அரசாங்கமும் இந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் இரு கண்களையும் அவர்கள் முழுவதுமாக சிதைத்துள்ளார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News