30 ஆண்டுகளாக கழிவறையில் சமைக்கப்பட்ட ஹோட்டல் உணவுகள் - எங்கே தெரியுமா?

சவுதி அரேபியாவில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமைக்கப்பட்ட ஹோட்டல் உணவுகள்.

Update: 2022-04-28 02:07 GMT

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ஹோட்டல் இயங்கி வந்துள்ளது. மேலும் இந்த ஹோட்டலில் உணவுகள் சரி இல்லை என்பது தொடர்பான வழக்குகள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரி அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர். கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அந்த ஹோட்டல் உணவகத்தில் சமோசா உட்பட அனைத்து உணவுகளும் கழிப்பறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.


அந்த கழிவறையிலேயே மதிய உணவு உள்ளிட்ட பிற உணவுகளும் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலாவதி ஆகிவிட்ட பொருட்கள் மற்றும் பூச்சி எலிகளும் இந்த உணவகத்தில் இருப்பதையும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளார்கள். மேலும் அங்கு வேலை பார்க்கும் வேலையை அவர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு அறிவுரையும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதனை தொடர்ந்து ஹோட்டல் பூட்டப்பட்டு உள்ளது. சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவகம் சவுதி அரேபியாவில் மூடப்படுவது என்பது இது முதல் முறையல்ல. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினர். இதனையடுத்து உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் மூடி வைத்துள்ளார்கள். மேலும் இதனுடைய எதிரொலியாக பல்வேறு ஓட்டல்களில் இதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளது மேலும் 43 விதிமீறல் வழக்குகளும் 26 உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. 

Input & Image courtesy: Malaimalar News

Tags:    

Similar News