ஹைதராபாத்: NRI தொழிலதிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது !

ஹைதராபாத்தைச் சேர்ந்த NRI தொழிலதிபரை 4 பேர் சேர்ந்து கொலை செய்த வழக்கில் அவர்கள் தற்போது சரணடைந்துள்ளனர்.

Update: 2021-10-16 13:04 GMT

ஹைதராபாத்தில் இருந்த NRI தொழிலதிபர் ஒருவரை 4 பேர் கொலை செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 சகோதரர்களை தெலுங்கானா போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தெற்கு மண்டலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த படிகஜாராவ் பூபால் துணை போலீஸ் கமிஷனர்(DCP) அவர்களால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சந்திராயன்குட்டா பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் ராயீஸ் ஜாப்ரி, அடில் ஜாப்ரி, சையத் சாலே ஜாப்ரி மற்றும் சாத்பின் சலேஜாப்ரி ஆகியோர் ஆவர். 


கொலை செய்யப்பட தொழிலதிபர்களுடன் இந்த 4 பேர் ஏற்கனவே ஒன்றாக வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக துபாயில் 5 பேரும் ஒன்றாக வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட நபர் தனக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி இதுவரை எந்த வேலையும் வாங்கி தரவில்லை என்று இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இறந்தவர் இவரை தனக்கு சாதகமான தங்க கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தப்பட வைத்ததாகவும் கூறப்படுகிறது. 


 தொழிலதிபர் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்தபோது, ​​சகோதரர்கள் அவரை புதன்கிழமை சந்தித்துள்ளனர். அவர் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்தபோது, ​​அவர்கள் அவரைக் கொல்ல முடிவு செய்தனர் என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர் புதன்கிழமை குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து காவல்துறையினர் இந்த விவகாரத்தில் FIR பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. 

Input & Image courtesy:Aninews

 


Tags:    

Similar News