ஒன்லி ஃபேன்ஸ் நிறுவனத்தின் புதிய CEO-வாக நியமிக்கப்பட்டுள்ள NRI.!

ஒன்லி ஃபேன்ஸ் என்ற நிறுவனத்தின் புதிய CEO-வாக இந்தியாவைச் சேர்ந்த NRI நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-12-23 14:32 GMT

'Only Fans' என்ற நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த NRI ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். அதிலும் அவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்ரபாலி கான் என்ற மும்பையில் பிறந்த NRI தான் இந்த நிறுவனத்தின் தற்போது புதிய CEO-வாக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இந்தியர்கள் குறிப்பாக பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளின் தலைமை செயல் அதிகாரியாக அவர்கள் நியமிக்கப்படுவது இந்தியாவிற்கு பெருமை தரக்கூடிய ஒரு விஷயம்தான்.  


அந்த வகையில் தற்போது ஒன்லி ஃபேன்ஸ் என்ற சமூக வலைத்தளத்தின் CEO ஆக நியமிக்கப்பட்டிருக்கும், அம்ரபாலி கான் அந்த நிறுவனத்தின் கம்யூனிகேஷன் அதிகாரியாக அவர் பணியாற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தில் இவர் வேலை செய்வதற்கு முன்பு மார்கெட்டிங் துறையில் இவர் பணியாற்றி உள்ளார். 


CEO-வாக பதவியேற்ற பிறகு அது பற்றி அவர் கூறுகையில், " மிகப்பெரிய பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருக்கிறது.  நான் இதற்கு உண்மையுள்ள வகையில் நிறுவன வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்" என்றும் அவர் கூறியுள்ளார். 

Input & Image courtesy: News18



Tags:    

Similar News