தமிழக ஆளுநர் பற்றி இழிவாக பேசிய அரசியல் பிரமுகர் - அலேக்காக தூக்கிய காவல்துறை

Update: 2022-04-25 13:32 GMT

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சியை சேர்ந்த தலைவர் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன். இவர் மதுரையில் பிபி.சாவடி பல்லவன் நகர் பகுதியில் வசித்து வருகின்றார். இதற்கிடையே தனியார் தொலைக்காட்சியின் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார். இவரது பேச்சு மிகவும் கண்ணியக் குறைவாகவும், இழிவான கருத்துக்களையும் பயன்படுத்திருந்தார்.

இது தொடர்நாக நுண்ணறிவு பிரிவு சமூக ஊடகப் பிரிவு சார்பு ஆய்வாளர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பேச்சு ஆளுநருக்கு எதிராக தமிழக மக்களை தூண்டி விட்டு கலகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கலவரத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Source: asianetnews

Image Courtesy: The Wire

Tags:    

Similar News