கல்லூரி மாணவர் மர்ம மரணம்: மறுபிரேத பரிசோதனை செய்ய கலல்ஹாசன் கோரிக்கை!

முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-08 08:58 GMT

முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தாவல் காவல் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால் மாணவர் பயத்தில் நிற்காமல் சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த போலீசார் மாணவரை பின்தொடர்ந்து விரட்டி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். கடைசியில் மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்கு சென்றபோது மாணவரின் ஆணுறுப்பு வீக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. காலையில் தூங்கி எழுந்து பார்க்கும்போது மணிகண்டன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தால் மாணவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது மாணவனின் சகோதரர் போலீசார் மீது புகாரும் அளித்தார்.

இந்த சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News