ஓட்டு போட்டு தப்பு பண்ணிட்டோமே என பட்டியலின மக்களை புலம்ப வைத்த தி.மு.க பிரமுகர்!

திருமலைகிரியில் மீண்டும் பட்டியல் இன நபர் மீது சரமாரி தாக்குதல் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2023-03-19 02:03 GMT

சேலத்தில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த நபரை தி.மு.க பிரமுகர் ஒருவர் தற்பொழுது சரமாரியாக தாக்கி இருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. சேலம் மாவட்டத்தில் அமைந்து இருப்பது தான் திருமலைகிரி கிராமம் இங்குள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. இதற்கான மண்டல பூஜை தற்போது நடந்து முடிந்தது அப்பொழுது அதை கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்று இருக்கிறார்.


அதை தட்டி கேட்டு சிலரிடம் அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை அறிந்து சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மாணிக்கம் அந்த இளைஞரையும், அவரது பெற்றோர்களையும் தரமாரியான வார்த்தைகளால் தட்டி காய் தாக்கியிருக்கிறார். இந்த ஒரு விவகாரம் தான் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அந்த விவகாரம் காரணமாக மாணிக்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் திருமலை கிரி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூக வாலிபரை தி.மு.க பிரமுகர் கொடுமை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



மேலும்  திருமலைகிரி வள்ளுவர் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் இவர் 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரன் குமார் என்பவர் மதுபோதையில அங்கு வந்து இருக்கிறார். மேலும் அசோகன் தான் எடுத்து மறைத்து வைப்பதாக கூறி அவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதன் காரணமாக காயமடைந்த அவர் அடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இது குறித்து புகார் அளித்தும் தி.மு.க பிரமுகர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Input & Image courtesy: News

Tags:    

Similar News